Udaya kammanpila.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியல்வாதி!

Share

அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும், எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயும் பொறுப்புகூறவேண்டும். இதனை மறந்து இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்துக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமானால் எந்த பகுதி மற்றும் நேர விவரம் உரிய வகையில் அறிவிக்கப்பட வேண்டும் என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்.

அதேவேளை, உதய கம்மன்பில என்பவர் எதிர்கால இலக்குடன் அரசியல் நடத்துபவர். அரசின் நல்ல திட்டங்களுக்கு உரிமை கோரும் அவர் ,பிரச்சினைகள் வரும்போது நழுவிவிடுவார். தற்போதைய நெருக்கடி நிலைக்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல என அவர் கூறுவது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....