1 218jghjghjghj
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

Share

எதிர்வரும் நாள்களில் நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த அபாயநிலை ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தற்போது 60 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 2 லட்சம் கிலோ மரக்கறிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் மரக்கறிகளே கிடைக்கப்பெறுகின்றன என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கெப்பிட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளன ¨ªஎனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை எதிர்வரும் நாட்களில் தொடருமாயின் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நாடளாவிய ரீதியில் ஏற்படும் என வர்த்தகர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...