இலங்கை இந்தியா
செய்திகள்அரசியல்இலங்கை

கடன் வழங்க கொழும்புக்கு டில்லி கடும் நிபந்தனைகள்!

Share

இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என அறியமுடிகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக்கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளது என அறியமுடிகின்றது.

கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொண்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்துச் செய்யப்பட்டது.

இதன் காரணமாக உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இன்னும் திட்டம் வகுக்கப்படவில்லை.

இலங்கை எடுத்த டிசம்பர் மாதக் கடனும் இந்த வாரத்தில் செலுத்தப்பட இருந்த நிலையில், பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது, திருகோணமலைத் துறைமுகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா முன்வைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...