1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

Share

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்த ‘ஏர் ஏசியா’ (AirAsia) விமான சேவைக்குச் சொந்தமான ஒரு விமானம் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று இரவு 9.50 மணிக்கு இலங்கையை வந்தடையவிருந்தது. நாட்டிற்கு வரவிருந்த ஒரே ஒரு விமானம் மட்டுமே இதுவரை திருப்பி விடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாகக் கட்டுநாயக்கவுக்கு வரவிருக்கும் விமானங்கள் தரையிறங்க முடியாத அவசர நிலை ஏற்பட்டால், அந்த விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கும் திருப்பி அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று மாலை தெரிவித்திருந்தார்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்படியே ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...