செய்திகள்இலங்கை

40 இலட்சம் பெறுமதியுடைய இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மீட்பு!

Share

இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ளும் கும்பல் ஒன்றினாலேயே இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த பயணிகளை சோதனை இட்டபோதே குறித்த பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள பொருள்கள் 40 லட்சம் சந்தைப் பெறுமதியுடையவை என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிட்ப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...