செய்திகள்இலங்கை

40 இலட்சம் பெறுமதியுடைய இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மீட்பு!

Share

இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ளும் கும்பல் ஒன்றினாலேயே இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த பயணிகளை சோதனை இட்டபோதே குறித்த பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள பொருள்கள் 40 லட்சம் சந்தைப் பெறுமதியுடையவை என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிட்ப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...