1 5 750x563 1
செய்திகள்இலங்கை

வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

Share

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட நாள்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

கடந்த மாதமும் தாம் போராட்டம் மேற்கொண்டிருந்த போதும், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ளும் தமக்கு உரிய காலத்தில் மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு கிடைக்கவில்லை போன்ற கோரிக்கைகளை முன்னிட்டு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த வருடத்துக்குரிய மேலதிக நேரக் கொடுப்பனவு நீண்டகாலத்துக்கு பின்னரே கிடைக்கப்பெற்றதாகவும் இவ் வருடத்திலும் பல மாதங்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், விரைவாக மேலதிக நேர கொடுப்பனவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...