1 5 750x563 1
செய்திகள்இலங்கை

வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

Share

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட நாள்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

கடந்த மாதமும் தாம் போராட்டம் மேற்கொண்டிருந்த போதும், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ளும் தமக்கு உரிய காலத்தில் மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு கிடைக்கவில்லை போன்ற கோரிக்கைகளை முன்னிட்டு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த வருடத்துக்குரிய மேலதிக நேரக் கொடுப்பனவு நீண்டகாலத்துக்கு பின்னரே கிடைக்கப்பெற்றதாகவும் இவ் வருடத்திலும் பல மாதங்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், விரைவாக மேலதிக நேர கொடுப்பனவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...