1 5 750x563 1
செய்திகள்இலங்கை

வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

Share

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட நாள்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

கடந்த மாதமும் தாம் போராட்டம் மேற்கொண்டிருந்த போதும், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ளும் தமக்கு உரிய காலத்தில் மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு கிடைக்கவில்லை போன்ற கோரிக்கைகளை முன்னிட்டு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த வருடத்துக்குரிய மேலதிக நேரக் கொடுப்பனவு நீண்டகாலத்துக்கு பின்னரே கிடைக்கப்பெற்றதாகவும் இவ் வருடத்திலும் பல மாதங்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், விரைவாக மேலதிக நேர கொடுப்பனவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...