environment1
செய்திகள்இலங்கை

பசுமை அமைதி விருதுகள் – பொது அறிவுப் போட்டி

Share

பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக பசுமை அமைதி விருதுகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தாலேயே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்படியாக மாணவர்களிடையே சூழல் பொது அறிவுப் போட்டிப் பரீட்சையினை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப் பரீட்சை இணைய வழியூடாக 03.10.2021 அன்று இரவு 7.00 மணி தொடங்கி 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.

பல்தேர்வு வினாக்களைக் கொண்ட இப் பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் மாணவர்கள் தோற்ற முடியும்.

பரீட்சையில் சித்தி அடையும் அனைவருக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறப்புச் சித்தி அடைபவர்களுக்குச் சான்றிதழோடு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொதியும், முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தினாலான பசுமை அமைதி விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்க நிறுவுனர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...