Education 2
செய்திகள்இலங்கை

தரம் 6 – 9 கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பம்

Share

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகள் தற்போது பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும், வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்ட கற்றல் செயற்பாடுகளை இவ் வருட முடிவுக்குள் முழுமையாக நிறைவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் ஆண்டுக்கான தவணை இறுதி பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாத இறுதி வரை பிற்போடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிர்வாகத்தால், கல்வி அமைச்சுக்கு இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் கலந்துரையாடி தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...