Tissa Kuttiyarachchi
செய்திகள்அரசியல்இலங்கை

பஸில் எந்த முடிவு எடுத்தாலும் நாம் கட்டுப்படுவோம்! – திஸ்ஸ குட்டியாராச்சி

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்கியுள்ளோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸிலுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போதே நிதி அமைச்சருக்கு பின்வரிசை எம்.பிக்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், ‘அசிங்கமான அமெரிக்கர்’ என விமல், கம்மன்பில போன்றவர்கள் தன்னை விமர்சிப்பதால் நிதி அமைச்சர் கவலையில் இருக்கின்றார், அதனை நாம் உணர்ந்தோம்.

பஸில் ராஜபக்ச என்பவர் இந்நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாத நபர். போர் காலத்தில் பெரும் பங்களிப்பு செய்தவர். எனவே, விமல், கம்மன்பில போன்றவர்களின் அறிவிப்பு எமக்கும் கவலை அளிக்கின்றது.

அப்படியானவர்கள் எமது அமைச்சரவையில் இருந்தது வெட்கப்பட வேண்டிய விடயம்.” – என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...