Tissa Kuttiyarachchi
செய்திகள்அரசியல்இலங்கை

பஸில் எந்த முடிவு எடுத்தாலும் நாம் கட்டுப்படுவோம்! – திஸ்ஸ குட்டியாராச்சி

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்கியுள்ளோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸிலுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போதே நிதி அமைச்சருக்கு பின்வரிசை எம்.பிக்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், ‘அசிங்கமான அமெரிக்கர்’ என விமல், கம்மன்பில போன்றவர்கள் தன்னை விமர்சிப்பதால் நிதி அமைச்சர் கவலையில் இருக்கின்றார், அதனை நாம் உணர்ந்தோம்.

பஸில் ராஜபக்ச என்பவர் இந்நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாத நபர். போர் காலத்தில் பெரும் பங்களிப்பு செய்தவர். எனவே, விமல், கம்மன்பில போன்றவர்களின் அறிவிப்பு எமக்கும் கவலை அளிக்கின்றது.

அப்படியானவர்கள் எமது அமைச்சரவையில் இருந்தது வெட்கப்பட வேண்டிய விடயம்.” – என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...