maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றனர் சுதந்திரக்கட்சியினர்!

Share

கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும், ஆலோசனையும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் விரைவில் கண்டி சென்று, மகாநாயக்க தேரர்களை சந்திப்பார்களென கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் அங்கம் வகித்தாலும், அரசின் செயற்பாடுகளை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக விமர்சித்துவருகின்றது. இதனால் மொட்டு கட்சிக்கும், சுதந்திரக்கட்சியினருக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது.

அரசுக்குள் இருந்துகொண்டு, சலுகைகளை அனுபவித்தபடி விமர்சிப்பதைவிட, கௌரவமாக வெளியேறுங்கள் என சுதந்திரக்கட்சியினருககு மொட்டு கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் புதியதொரு கூட்டணியை கட்டியெழுப்புவதில் சுதந்திரக்கட்சியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திரக்கட்சிக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மகநாயக்க தேரர்களை சந்தித்து, ஆலோசனை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் முடிவொன்ற எடுக்கவுள்ளார். அதற்காகவே அமைச்சரவை மறுசீரமைப்பைக்கூட அவர் பிற்போட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...