09Srilanka AY 10
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆபிரிக்காவாகிறது இலங்கை – சந்திரிக்கா!!

Share

ஆபிரிக்காவிலுள்ள சில ஏகாதிபத்திய நாடுகளில் நடப்பதுபோல்தான் தற்போது இலங்கையிலும் நடக்கின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் விமர்சித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சந்திரிக்கா அம்மையார்,

” இவர்கள் (ஆட்சியாளர்கள்) அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு தற்போது நல்லவர்கள்போல் செயற்பட்டுவருகின்றனர்.

அவர்கள் இழைந்த தவறுகளை, குற்றங்களை சுட்டிக்காட்டியவர்களை, குற்றவாளிகளாக்குவதற்கான முயற்சி இடம்பெற்றுவருகின்றது.

நியாயமான விசாரணைகளின் பின்னர் யாராவது, தவறிழைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால் அல்லது வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தால், தான் பழிவாங்கப்பட்டுள்ளதாகக்கூறி, விசாரித்தவர்களை தண்டிப்பது உலகில் வேறு எங்கும் நடக்காது.

சர்வாதிகாரிகள் உள்ள ஒரு சில ஆபிரிக்க நாடுகளிலேயே இப்படி நடக்கும்.” – என்றார்.

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...