Vasudeva Wasudeva
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி மீள்பரிசீலனைக்கு!! – வாசுதேவ கோரிக்கை

Share

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டம் தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” யுகதனவி உடன்படிக்கை எமக்கு மாற்றுவழியில்தான் கிடைத்தது. அதிலுள்ள உள்ளடக்கங்கள் பாதகமானவை. எனவே, அது மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆரம்பக்கட்ட ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதனை மாற்றலாம். ஏனெனில் இது விடயத்தில் அரசியல் மட்டத்திலான தீர்மானமே தாக்கம் செலுத்தும்.”- என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் யுகதனவி தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....