1605415571 namal 2
செய்திகள்இலங்கை

லொஹானுக்கு எதிராக விசாரணைகள்! – நாமல்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கைதிகளின் கோரிக்கைக்கு அமைய  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கைதிகளை சந்தித்த நாமல், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

நாட்டை ஒழுக்கமான நாடாக கட்டியெழுப்பும் நோக்குடனேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.
அதற்கு எதிராக யாரேனும் வந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் ஒருபோதும் தயங்கமாட்டார்.

தற்போது சிறைச்சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையிலுள்ள சி.சி.டி.வி.காட்சிகளை ஒழிக்க முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெறாது.

இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை வந்தவுடன் இவ் விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்போம் என அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக, நாளை (மே 11) அளவில்...

world 55
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை, மே 10)...

world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...