images 9
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் அல்லலுறும் யானைகள்: உணவின்றி மனித குடியிருப்புகளை நோக்கிப் படையெடுப்பு!

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரில் அல்லலுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் காடுகள் முழுவதும் வெள்ள நீர் காணப்படுகிறது.

இதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன. அதேவேளையில், காடுகளில் உணவின்மை காரணமாக யானைகள் மற்றும் ஏனைய வன விலங்குகள் மனிதக் குடியிருப்புகள் நோக்கிப் படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளநீர் வடிந்த பின்னரே வனவிலங்குகளின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனவிலங்குகளிடமிருந்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...