articles2FWdcbeAlRn6LMdiTyRA63
செய்திகள்இலங்கை

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை  முறைமைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Share

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை (e-invoice) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கும், வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும், வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், ஏற்புடைய விடயங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி திரட்டுவதற்காக அமுல்படுத்தியுள்ள வரி அறவீட்டு நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமை (RAMIS) இற்கு இணங்கியொழுகும் வகையில் இலத்திரனியல் சிட்டை வேலைச்சட்டகத்தைக் கடைப்பிடிப்பதற்காக மதிப்பாய்வொன்றைச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதிப்பாய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில், இலத்திரனியல் சிட்டை முறைமையை நடைமுறைப்படுத்துவதன் ஆரம்பக் கட்டமாக பாதுகாப்பு இணையத்தள செயலி வேலைத்திட்ட இடைமுகப்பு (Web Appilication Programming Interface – Web API) வசதியை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரிப் பதிவு செய்துள்ளவர்களுக்கான Web API வசதியை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி திரட்டுவதற்காக அமுல்படுத்தியுள்ள வரி அறவீட்டு நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமையை (RAMIS) மேம்படுத்துவதற்காக சிங்கப்பூரின் NCS Solution Pvt Limited இற்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...