samayam tamil
செய்திகள்இந்தியாசினிமாபொழுதுபோக்கு

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கானின் மகனுக்கு 14 நாட்கள் மறியல்!

Share

நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் இருந்து, கோவா சென்ற சொகுசு கப்பலில் விருந்தொன்று நடைபெற்றிருந்தது.

குறித்த விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்துவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த கப்பலுக்குச் சாதாரண பயணிகளைப் போல சென்ற போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அங்கு கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியமை தெரியவந்தது.

இதனையடுத்து, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளடங்கலாக, எட்டுப் பேரைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், 3 நாட்களின் பின்னர் அவர்களை மும்பை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில், குறித்த எட்டுப் பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...