download 4 4
செய்திகள்இலங்கை

திலீபனின் நினைவு கூறல் தடை – எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் சிவஞானம்!

Share

தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உட்பட மூவரினை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (23) கைதாகிய செல்வராஜா கஜேந்திரன் , நேற்றையதினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பார்.

இந்நிலையில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இனத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...