6e07f2bbd17b1daeda0d611be0ad3961 M 1
செய்திகள்அரசியல்இலங்கை

சிலிண்டர் வெடிப்பு : பந்துல தலைமையில் கூடிய ஆலோசனை குழு!!

Share

தொடர்ந்து சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால்  நாட்டில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஒரு ஆலோசனை குழு நேற்று (03) கூடியது.

பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் இதுவரை 34 சிலிண்டர்கள் வெடித்து, மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  காலந்தாழ்த்த் செயற்பட்டால் இதனால் பாதிப்புகளை குறைக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சிலிண்டர்களில் பொருத்தப்படும் ஏனைய துணைகருவிகளாலும் இவ்வாறு விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கூட்ட இறுதியில் எவ்வித முடிகளும் எட்டப்படாமல் , இது தொடர்பான ஆய்வுகள் நிறைவடைய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, லிற்றோ, லாப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை  அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...