teacher 720x375 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் கற்பதற்கான சூழலை முதலில் உருவாக்குங்கள்! – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Share

மாணவர்கள் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு – கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும், ஆசிரியர் சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்த திட்டமிட்டு வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் 40 வீதமான மாணவர்களே கல்வியைப் பெறுகின்றனர், இந்த நிலையில் ,முழு மாணவர்களும் கற்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்காது அரசாங்கம் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்திய பின்னர், பரீட்சைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...