IMG 20220206 WA0010
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊர்காவற்துறையில் இனந்தெரியாத நபர்களால் மாடுகள் கொலை!

Share

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரவணை மற்றும் வேலணைப் பகுதியில் நான்கு மாடுகள் களவாடப்பட்டு இனந்தெரியாத மர்ம நபர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை வேளையில் சரவணை பகுதியில் ஒரு மாடும் வேலணை பகுதியில் மூன்று மாடுகளுமே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன.

கால்நடைகள் மேய்ச்சல் தரவையில் கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்துச் சென்ற இனந்தெரியாத மர்ம நபர்கள் இறைச்சிக்காக வெட்டிவிட்டு கழிவுகளை பற்றைக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களால் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 20220206 WA0010

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...