covid 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொவிட் தொற்று! – பாடசாலை மனைவி உயிரிழப்பு

Share

நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) மாணவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாத்தாண்டிய தப்போவ பகுதியைச் சேர்ந்த பி. எம். டி. மனிஷா குமாரி பெர்னாண்டோ என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போதே சிறுமி சுகவீனமடைந்து மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold
இலங்கை

மீண்டும் மீண்டும் குறைவடையும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் தங்க முதலீட்டாளர்கள்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் 24 கரட் தங்கம்...

policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....