8cebfadf keheliya rambukwella
செய்திகள்அரசியல்இலங்கை

கொரோனா கட்டுப்பாடுகள் மக்கள் கைகளிலேயே! – கெஹலிய தெரிவிப்பு

Share

நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மக்களின் நடத்தைகளே தீர்மானிக்கின்றன.

இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் துபோது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் பகுதியளவில் நீக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்குமாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் மக்களின் செயற்பாடுகளே தீர்மானிக்கும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றாது செயற்படுவார்களாயின், மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

அரசாங்கம் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மக்களும் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும். மக்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

கொரோனா பரவல் தொடர்பில் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ஆனால் தொற்று நோய் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைவரது எதிர்காலத்துக்கும் நல்லது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே தடுப்பூசிகள் தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற...

image cb0f8da672
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ தென் கொரியாவில் துணை சபாநாயகரைச் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்!

தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...