நாட்டில் சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மைக்காலமாக வீடுகளுக்குள்ளேயே சிறுவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறுவர்கள் மனநோய் சிலவற்றால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, வீடுகளில் சிறுவர்களுக்கு ஏற்றவாறான சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும்.
சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதைத் தவிர்த்தும் அவர்களை சாதாரண நிலைக்கு பழக்கப்படுத்த, அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதே சிறந்தது – எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment