Corona 13 20200702 1 570 850
செய்திகள்இலங்கை

கொரோனாத் தொற்று – 89 சிறார்கள் உயிரிழப்பு!

Share

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இதுவரையில் 89 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிறுவர்களை பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றொரும், பாதுகாவலர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பல நல சுகாதாரப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலிடி சில்வா கூறியவை வருமாறு,

” இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்த நாளிலிருந்து இற்றைவரை 10 ஆயிரத்து 500 கர்ப்பிணி தாய்மாருக்கு வைரஸ் தொற்றியுள்ளனர். இவர்களில் 60 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர்.

95 வீதமான தாய்மார் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

சிறார்கள் மத்தியில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருகின்றது. 18 வயதுக்கு குறைவான 89 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பெற்றோர், உறவினர், பாதுகாவலர்கள் மற்றும் அயலவர்கள் ஊடாகவே அவர்களுக்கு வைரஸ் தொற்றுகின்றது. எனவே, சிறார்களை பாதுகாக்க பொறுப்புடன் செயற்படுவோம்.”- என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...