india
செய்திகள்இந்தியா

இந்தியாவில் தொடரும் கொலைகள்…..

Share

விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகே இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.

இந்தியாவின் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அச்சடலத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தடுப்பு வேலியில் ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்ட பகுதிக்கு அருகில் இச்சடலம் மீட்கப்படுள்ளது.

மேலும் இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கொடூர கொலை சீக்கியக் குழுவான நிஹாங்ஸ்களால் நடத்தப்பட்டிருக்குமென சந்தேகிக்கப்படுகின்றது.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்தஇளைஞரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் சோனிபட் பொலிஸார் அந்த சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இக் கொலை தொடர்பில் பொலிஸ் தரப்பில் எதுவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...