Temple 02
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

ஆலய வழிபாட்டிற்குத் தடை விதித்த இராணுவத்தால் குழப்ப நிலை (படங்கள்)

Share

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று (26) மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சென்ற மக்களை வழிபாடுகள் மேற்கொள்ளவிடாமல் இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்தபோது, அங்கு சென்ற இராணுவத்தினர் இன்று பூசைகளை செய்ய முடியாது எனவும் வேறு ஒரு நாளில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தமையால் குழப்பை நிலை ஏற்பட்டது.

Temple 03

இந்நிலையில் மக்களின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சந்திரறூபன், பூசை வழிபாடு செய்ய தடைவிதித்த இராணுவத்தினரிடம் நீங்கள் கூறுவது போன்று பூசை வழிபாடுகளை மாற்ற முடியாது எனத் தெரிவித்தனர்.

அத்துடன் பூசை செய்யக் கூடாது எனில் நீதிமன்ற தடை உத்தரவினை காண்பியுங்கள் என கோரியதோடு இது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கி சம்பவ இடத்திற்கு அழைத்தனர்.

Temple 01

இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிஸார் மக்களை வழிபாட்டிற்கு அனுமதித்துள்ளதுடன் குறித்த ஆலய முன்றலில் சூழப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் விலகி சென்றுள்ளார்கள். அதற்குப் பின்னரே ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...