Temple 02
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

ஆலய வழிபாட்டிற்குத் தடை விதித்த இராணுவத்தால் குழப்ப நிலை (படங்கள்)

Share

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று (26) மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சென்ற மக்களை வழிபாடுகள் மேற்கொள்ளவிடாமல் இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்தபோது, அங்கு சென்ற இராணுவத்தினர் இன்று பூசைகளை செய்ய முடியாது எனவும் வேறு ஒரு நாளில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தமையால் குழப்பை நிலை ஏற்பட்டது.

Temple 03

இந்நிலையில் மக்களின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சந்திரறூபன், பூசை வழிபாடு செய்ய தடைவிதித்த இராணுவத்தினரிடம் நீங்கள் கூறுவது போன்று பூசை வழிபாடுகளை மாற்ற முடியாது எனத் தெரிவித்தனர்.

அத்துடன் பூசை செய்யக் கூடாது எனில் நீதிமன்ற தடை உத்தரவினை காண்பியுங்கள் என கோரியதோடு இது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கி சம்பவ இடத்திற்கு அழைத்தனர்.

Temple 01

இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிஸார் மக்களை வழிபாட்டிற்கு அனுமதித்துள்ளதுடன் குறித்த ஆலய முன்றலில் சூழப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் விலகி சென்றுள்ளார்கள். அதற்குப் பின்னரே ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...