Charles Nirmalathan 1
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

மீனவர்களிடையே மோதல்! – அரசில் இராஜதந்திரமா? – கேள்வியெழுப்புகிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்

Share

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசினால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமுன்றத்தில் இன்று கடற்றொழில் அமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பிய அவர்,

” இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என நீங்கள் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் உறுதியளித்தீர்கள். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது கடற்றொழிலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன..

இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா.” – என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

” அரசியல் உள்நோக்கத்துடன்தான் இந்த கேள்வியை எழுப்புகின்றீர்கள். உங்கள் நல்லாட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. எங்கள் ஆட்சியில் இப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...