IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

Share

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருவதுடன், தேவாலயக் கட்டிடங்களை இடித்துத் தள்ளும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

செங்டூ (Chengdu) நகரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ (Early Rain Covenant Church) தேவாலயத்தில் சீன பாதுகாப்புப் படையினர் விசேட சோதனையை நடத்தினர். இதில் தேவாலயத்தின் தற்போதைய தலைவர் லி யிங்சியாங் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘சீனாவின் எருசலேம்’ என்று அழைக்கப்படும் வென்சூ (Wenzhou) நகரில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ‘யாயாங்’ தேவாலயக் கட்டிடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

மத நடைமுறைகளைச் சீன கம்யூனிஸ்ட் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் (Sinicization of Religion) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தேவாலயங்களைத் தவிர, சுயமாக இயங்கும் திருச்சபைகளைச் சட்டவிரோதமானவை என அரசு முத்திரை குத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சீனா முழுவதும் போதகர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் திட்டமிட்டுத் தேடிக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தொடர் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...