IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

Share

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருவதுடன், தேவாலயக் கட்டிடங்களை இடித்துத் தள்ளும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

செங்டூ (Chengdu) நகரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ (Early Rain Covenant Church) தேவாலயத்தில் சீன பாதுகாப்புப் படையினர் விசேட சோதனையை நடத்தினர். இதில் தேவாலயத்தின் தற்போதைய தலைவர் லி யிங்சியாங் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘சீனாவின் எருசலேம்’ என்று அழைக்கப்படும் வென்சூ (Wenzhou) நகரில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ‘யாயாங்’ தேவாலயக் கட்டிடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

மத நடைமுறைகளைச் சீன கம்யூனிஸ்ட் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் (Sinicization of Religion) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தேவாலயங்களைத் தவிர, சுயமாக இயங்கும் திருச்சபைகளைச் சட்டவிரோதமானவை என அரசு முத்திரை குத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சீனா முழுவதும் போதகர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் திட்டமிட்டுத் தேடிக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தொடர் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...