gotabaya rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியாக இரு ஆண்டுகள் பூர்த்தி: ஆனால் சாதித்தது தான் என்ன?

Share

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 02வது ஆண்டு பூர்த்தியாகின்றது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நவம்பர் 18 ஆம் திகதி அனுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்குத் தட்டுப்பாடு என்று நாட்டில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன.

தற்போது இரண்டு ஆண்டுகளில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

இரு ஆண்டுகளில் ஜனாதிபதியாக கோட்டாபய சாதித்தவை என்னவென்று சிந்திக்க வைக்கிறது என மக்கள் விசும்புகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...