img
செய்திகள்இலங்கை

தென்னை அபிவிருத்தி சபை தலைவர் இராஜினாமா!!

Share

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை கித்துள் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இராஜினாமா கடிதம் தமக்கு அனுப்பி வைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் பதவியை இராஜினாமா செய்யுமாறு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகம மருத்துவ பீடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்பதால் அதன் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...