attack 2 720x375 1
செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் மோதல் – வீடுகள் பல சேதம்!

Share

யாழ். பருத்தித்துறை புனித நகர் பகுதியில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

பல கிராமங்களிலிருந்து ஒன்று சேர்ந்து கும்பலாக வந்தவர்கள் தமது வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பருத்தித்துறை பொலிஸாருடன், நெல்லியடி பொலிஸாரும் வரவழைக்கப்பட்ட நிலையில், குறித்த வன்முறைச் சம்பவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட வீடுகள் காணப்படும் பகுதியில் வசிக்கும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...