3e687ce8 35e823a1 chinasl
செய்திகள்இலங்கை

வடக்கில் மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா!

Share

சீனா வடக்கிலுள்ள தீவுகளில் முன்னெடுக்க இருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது. வடக்கில் நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் இச்செயற்றிட்டத்தை ஆரம்பிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sino Soar Hybrid Technology என்ற சீன நிறுவனம் பாதுகாப்பு தொடர்பாக மூன்றாம் தரப்பு முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்டே இச்செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இலங்கையில் மின்னுற்பத்தி திட்டத்தை கைவிட்ட சீன நிறுவனம் கடந்த 29 ஆம் திகதி மாலைத்தீவிலுள்ள 12 தீவுகளில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இச்செயற்றிட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, இச்செயற்றிட்டம் தொடர்பாக விழிப்புடன் இருப்பதாக இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...