chennai
செய்திகள்இந்தியா

மீண்டும் சேவையை தொடங்கிய சென்னை விமான நிலையம்

Share

சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதன் காரணத்தால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூா்,ஹைதராபாத் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.

ஆனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமானங்களை தரையிற கூடாது என்று இந்திய விமானநிலைய ஆணையம் தடை விதித்த நிலையில் அத்தடையை மாலை 6 மணியுடன் இந்திய விமானநிலைய ஆணையம் விலக்கிக் கொண்டதையடுத்து,

புனேவிலிருந்து முதல் விமானம் 65 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 6.18 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி,மும்பை,மதுரை,கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து தரையிறங்கின .

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

Jaishankar
இந்தியா

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.

இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...