செய்திகள்இலங்கை

சிமெந்து, பால்மா வரிகள் நீக்கம்!

Share

சிமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மொழி வினாவுக்கு பதிலளித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பால்மா, சிமெந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் விரைவில் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும்.

இதேவேளை விரைவில், பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அரிசி, சீனி, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையும் உண்மையே. இருப்பினும் தற்போது நாட்டில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

எதிர்வதும் 7ம் திகதி ஹம்பாந்தோட்டையில் திறக்கப்படவுள்ள சிமெந்து தொழிற்சாலை மூலமாக மூன்று மில்லியன் சிமெந்து மூடைகள் மாதமொன்றுக்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும். அத்துடன் சிமெந்து இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை நீங்குவதற்கும், சிமெந்து வரியை நீக்குவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...