z p01 Parliament
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றுக்கு விசேட பாதுகாப்பு!!

Share

எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைமைச்சரால் எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வரை நாடாளுமன்றம் கூடஉள்ளது. அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூடவுள்ளது. குறிப்பாக ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்கள் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் விவாதம் நடைபெறவுள்ளது.

செவித்திறன் குறைபாடுள்ளவர்களைக் கருத்தில்கொண்டு வரவு செலவுத் திட்ட விவாதம் இம்முறை சைகை மொழியிலும் இடம்பெறவுள்ளமை விசேடமாகும்.

எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நிலையில், விசேட பாதூகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன அத்துடன் 12 ஆம் திகதி தவிர ஏனைய நாட்களிலும் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2019 மற்றும் 2020 வரவு செலவுத் திட்டங்கள் தேர்தல் மற்றும் கொவிட் நிலைமை காரணமாக சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது 2 வருடங்களின் பின்னரே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...