Black fungus Mucormycosis symptoms and side 555
செய்திகள்இலங்கை

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!!

Share

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!!

இலங்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாத் தொற்றாளர்களில் இதுவரை சிறுவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் எவையும் இல்லை. எனினும் சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இதன் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கறுப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டால் முதலில் முகம் வீங்கும், காய்ச்சல் , தலைவலி, மூக்கின் உட்புறத்தில் கறுப்பு நிறத்தில் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே இவற்றை கவனிக்காது விட்டால் கண்கள் பாதிக்கும். கண்களைப் பாதித்தால் கண்பார்வை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட நேரிலும்.

எதுவித சிகிச்சையளித்தாலும் இழந்த பார்வையை மீள பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிகுறிகள் சிறுவர்களிடையே தென்பட்டால் உடனடியான வைத்தியசாலை அழைத்துச் செல்லுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...