Basil Rajapaksa PM
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் வியூகம்!

Share

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் ராஜபக்ச வியூகம் வகுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.

மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், பட்ஜட் கூட்டத்தொடரின் பின்னர் பதவி விலகுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்களான அதாவுல்லா, கருணா, ஹிஸ்புல்லா உட்பட பல தரப்புகளின் ஆதரவுடன் பிள்ளையான் களமிறங்கலாம் எனவும், இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கிழக்கு தேர்தல் களம் சவால்மிக்கதாக காணப்படும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்கான வாக்கு வங்கியை உடைப்பதற்காக உதிரிகளும் களமிறக்கப்படவுள்ளன.

பிள்ளையானை வைத்து பஸிலே தற்போது வியூகம் வகுத்துவருகின்றார். அதேவேளை, வடக்கு மாகாணத்திலும் முக்கிய புள்ளியொருவரை களமிறக்குவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...