Basil Rajapaksa PM
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் வியூகம்!

Share

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் ராஜபக்ச வியூகம் வகுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.

மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், பட்ஜட் கூட்டத்தொடரின் பின்னர் பதவி விலகுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்களான அதாவுல்லா, கருணா, ஹிஸ்புல்லா உட்பட பல தரப்புகளின் ஆதரவுடன் பிள்ளையான் களமிறங்கலாம் எனவும், இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கிழக்கு தேர்தல் களம் சவால்மிக்கதாக காணப்படும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்கான வாக்கு வங்கியை உடைப்பதற்காக உதிரிகளும் களமிறக்கப்படவுள்ளன.

பிள்ளையானை வைத்து பஸிலே தற்போது வியூகம் வகுத்துவருகின்றார். அதேவேளை, வடக்கு மாகாணத்திலும் முக்கிய புள்ளியொருவரை களமிறக்குவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...