pasalai
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை வந்தடைந்தது ஒரு தொகுதி பசளை

Share

இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதல் தொகுதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 12.25 மணிக்கு இந்த பசளைத் தொகுதி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL – 1156 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தது.

இந்தத் திரவப் பசளை, அம்பாறை, மட்டக்களப், திருகோணமலை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு, மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து, இலங்கையால் 31 லட்சம் லீற்றர் திரவ நைட்ரஜன் பசளை கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 5 லட்சம் லீற்றர் பசளை, இந்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளது.

குறித்த பசளையானது, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற உயர் ரக பசளையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...