sajith resign
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குக! – சஜித் கோரிக்கை

Share

ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று பயணம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து சுகநலம் விசாரித்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

” ரஞ்சன் ராமநாயக்க மோசடியில் ஈடுபடும் நபர் கிடையாது. தன்னிடம் உள்ளதைக் கூட மக்களுக்கு வழங்கிய மனிதாபிமானமுள்ளவரே அவர்.

ரஞ்சன் ராமநாயக்க உயர்கல்வி கற்று பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார். அதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். மீண்டும் அந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...