sajith resign
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குக! – சஜித் கோரிக்கை

Share

ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று பயணம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து சுகநலம் விசாரித்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

” ரஞ்சன் ராமநாயக்க மோசடியில் ஈடுபடும் நபர் கிடையாது. தன்னிடம் உள்ளதைக் கூட மக்களுக்கு வழங்கிய மனிதாபிமானமுள்ளவரே அவர்.

ரஞ்சன் ராமநாயக்க உயர்கல்வி கற்று பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார். அதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். மீண்டும் அந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...