mullai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி ! – முல்லை. நீதிமன்று அதிரடி

Share

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து தீர்ப்பளித்துள்ளது முல்லைத்தீவு நீதிமன்றம்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து குறித்த தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

“இறந்தவர்களை நினைவுகூருவது மனித பண்பு. நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்றாலும், குறித்த அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவுகூரலாம்” என தெரிவித்த நீதிபதி ஏற்கனவே வழங்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து கட்டளையிட்டார்.

குறித்த நகர்த்தல் பத்திரத்திர விசாரணை வழக்கில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், வி.எஸ்.தனஞ்சயன், கணேஸ்வரன், ருசிகா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், கடந்த 17ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...