rrrr
செய்திகள்இலங்கை

கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதியுதவி செய்த குற்றச்சாட்டு! – வர்த்தகருக்கு விளக்கமறியல்!

Share

லங்கா சதொச நிறுவனத்துக்குரிய வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேலியாகொட பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூடு உள்ளடக்கப்பட்ட கொள்கலன்களே வெளியேற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இந்த மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார் என வெலிசர நீதவான் நீதிபதி ஹேசாந்த டீ மெல் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபரின் மேல் தகவல்களை மறைத்தல், சட்டவிரோதமாக பொருள்களை விடுவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...