vijaya
செய்திகள்அரசியல்இலங்கை

விஜயதாசவுக்கு எதிராக நடவடிக்கை! – ஆளுங்கட்சி கோரிக்கை

Share

2022 நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பை புறக்கணித்த ஆளுங்கட்சி எம்.பி. விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன. 60 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்களில் மூவர் ஆளுங்கட்சியினர். இதில் இருவர் முன்கூட்டியே சமூகமளிக்கமாட்டோம் என்பதை அறிவித்துள்ளனர். எனினும், விஜயதாச ராஜபக்ச வாக்கெடுப்பை புறக்கணித்தார்.

எனவே, இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...