corona 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொரோனாவால் வடக்கில் 71 பேர் உயிரிழப்பு!

Share

கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில்  2 ஆயிரத்து 612 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை 71 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும்  உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 74 பேர் கொவிட்- 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும், வவுனியா மாவட்டத்தில் 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும், மன்னார் மாவட்டத்தில் 273 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 833 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....