covid cells
செய்திகள்இலங்கை

வடக்கில் 15 நாள்களில் 6,667 தொற்றாளர்கள்!

Share

வடக்கில்  செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் மன்னாரில் 10 தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 4 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவர் என கொவிட் தொற்றால் பலியாகியுள்ளனர் .

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை வட மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 634 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 356 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...