sugar 1
செய்திகள்இலங்கை

பதுக்கி வைக்கப்பட்ட 650 தொன் சீனி மீட்பு!

Share

சீதுவ பகுதியில் இரண்டு களஞ்சியசாலைகளிலிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் (650 தொன்) சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.

குறித்த தொகை சீனி நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்யப்படாமல் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை ரகசிய பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் குறித்த இரண்டு களஞ்சியசாலைகளும் சோதனையிடப்பட்டன. இதன்போதே குறித்த தொகை சீனி கைப்பட்டப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு களஞ்சியசாலைகளின் முகாமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...