sugar 1
செய்திகள்இலங்கை

பதுக்கி வைக்கப்பட்ட 650 தொன் சீனி மீட்பு!

Share

சீதுவ பகுதியில் இரண்டு களஞ்சியசாலைகளிலிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் (650 தொன்) சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.

குறித்த தொகை சீனி நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்யப்படாமல் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை ரகசிய பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் குறித்த இரண்டு களஞ்சியசாலைகளும் சோதனையிடப்பட்டன. இதன்போதே குறித்த தொகை சீனி கைப்பட்டப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு களஞ்சியசாலைகளின் முகாமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...