கைது
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அறுவர் மாட்டினர்!

Share

பலாங்கொடை, நொன்பேரியல் இயற்கை வனத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த 6 பேரை நொன்பேரியல் வனப்பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இவ்வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழமையான‌ பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இவர்கள் உடனே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வனத்தில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வுகள், காடழிப்பு, வேட்டையாடுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவதால் இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...