corona virus
செய்திகள்இலங்கை

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் உயிரிழப்பு !

Share

வடக்கு மாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதம் முதல் நேற்று (24) வரையான காலத்தில் வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 401 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (25) சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைப்படி
வவுனியா மாவட்டத்தில் நேற்று(24) 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு நேற்றைய தினம் (24) யாழ் மாவட்டத்தில் ஐவரும் , வவுனியா மாவட்டத்தில் இருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை வட மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 719 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...