rtjy 41 scaled
இந்தியாசெய்திகள்

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம்!

Share

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம்!

இந்திய – சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 இந்திய இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்று (03.09.2023) நள்ளிரவில் ஏற்ப்பட்ட மேக வெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இத்திடீர் வெள்ளத்தில் இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பல இந்திய இராணுவ தளங்கள் மற்றும் பல இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன் காரணமாக படையினர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...