20220131 154612m scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அத்துமீறும் இந்திய மீனவர்கள்! – வடமராட்சி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில்

Share

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமராட்சி சுப்பமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக இந்திய மீனவர்கள் படகினால் மோதி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுவந்த ஆழியவளை மீனவர்களில் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.

இதனையடுத்து வடமாட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுமாறு தத்தமது மீனவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

பல வழிகளிலும் போராடிய தமக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும் தீர்வு வரும்வரை வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் அனைத்து வீதிகளையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில் வடமராட்சி, வடமராட்சி கிழக்குப் பகுதிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகளை போட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து முற்றாக செயலிழந்துள்ள நிலையில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

1a9c992f add6 4641 98c3 f404fc46ac48 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...